பொலிஸார், அதிரடிப்படை அடக்குமுறைகளை தாண்டி தமிழர் உரிமைக்கான போராட்டம் கொட்டும் மழையில் நகர்கிறது..!

ஆசிரியர் - Editor I

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” தமிழர் உரிமைக்கான போராட்டம் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றுவரும் நிலையில், பொலிஸார் மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை பிரயோகித்து போராட்டத்தை தடுக்க முயற்சித்து வருகின்றனர். 

கொரோனா தொற்றை காரணம் காட்டி மிகமோசமான அடக்குமுறையை பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் போராட்டகாரர்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வருகின்றனர். எனினும் போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராடி முன்னேறி வருகின்றனர். 

இன்று காலை ஆரம்பமான போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சமய தலைவர்கள் கலந்து கொண்டு உரிமைக்காக நடந்து வருகின்றனர். திட்டமிட்டபடி 6ம் திகதி பொலிகண்டியை வந்தடையும் போராட்டம் எனவும், 

நீதிமன்ற தடைகளாலும், அரச காட்டுமிராண்டித்தனத்தாலும் போராட்டம் தடைப்படாது. என போராட்டகாரர்கள் கூறியுள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு