நாங்கள் இராணுவம் மீது துப்பாக்கி சூடு நடத்தினோமா..? அப்பட்டமான பொய், எங்களிடம் துப்பாக்கிகளும் இல்லை..

ஆசிரியர் - Editor I

வவுனியா செட்டிகுளம் முசல்குத்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தாம் இராணுவம் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. எனவும் இராணுவமே தம் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.

செட்டிகுளம் பேராறு காட்டுப்பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

குறித்த இளைஞர் உட்பட மூன்றுபேர் நேற்று முன்தினம் பேராறு காட்டுப்பகுதிக்குசென்றுவிட்டு நேற்றுமாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் தங்கள் மீது மறைந்திருந்த இராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையால் அவர்கள் மீது இராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு நேற்று தெரிவித்திருந்தது. எனினும் தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப்பகுதிக்குசென்றதாகவும் மீண்டும் வீடுநோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இராணுவம் திடீர் என்று தங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன்

மற்றும் ஒரு நபர் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு