நடராஜனின் வீடு தேடி படையெடுக்கும் சினிமா இயக்குனர்கள்!!

ஆசிரியர் - Editor II

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜனின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் வீடு தேடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலிய தொடருக்கு பின் தமிழகம் திரும்பிய நடராஜன், சில தினங்களுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். 

இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்:- எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் என் வீடு தேடி வந்தனர். 

ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகின்றேன் என்று கூறிவிட்டேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு