கங்குலிக்கு அறுவை சிகிச்சை!! -நலமாக உள்ளார் என வைத்தியசாலை அறிக்கை-

ஆசிரியர் - Editor II
கங்குலிக்கு அறுவை சிகிச்சை!! -நலமாக உள்ளார் என வைத்தியசாலை அறிக்கை-

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான சவுரவ் கங்குலி நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான சவுரவ் கங்குலிக்கு அண்மையில் மீண்டும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த 3 அடைப்புகளில் ஒன்று ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 அடைப்புகளை சரி செய்ய ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை நேற்று முன் தினம் வழங்கப்பட்டு 2 ‘ஸ்டன்ட்’ பொருத்தப்பட்டது. 

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கங்குலியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், கங்குலி உடல் நலமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பிரைவேட் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு