கொரோனா விதிமுறைகளை மீறிய ரொனால்டோ!! -காதலியை சந்திப்பதற்கான அவர் செய்த காரியம்-

ஆசிரியர் - Editor II
கொரோனா விதிமுறைகளை மீறிய ரொனால்டோ!! -காதலியை சந்திப்பதற்கான அவர் செய்த காரியம்-

பிரபல கால்பந்து வீரர்; ரொனால்டோ, பொறுப்பற்ற விதத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரொனால்டோ இத்தாலியின் ஜூவாண்டஸ் கிளப் அணியில் விளையாடி வருகிறார். தற்போது கால்பந்து போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ரொனால்டோ, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ரொனால்டோ தனது காதலி ரோட்ரிக் பிறந்த நாளுக்காக துரின் நகரிலிருந்து சுமார் 150 கிலோ மீற்றர் பயணம் செய்து கோர் மேயுர் பகுதிக்கு சென்று உள்ளார் என்று பல்வேறு இத்தாலி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இத்தாலியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுபாடுகள் பற்றி துரின் நகரில் இருந்து ஜோடியாக வெளியேற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ரொனால்டோ மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு