ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்

ஆசிரியர் - Editor I
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்

உள்ளுராட்சி சபை தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் இத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளது. 

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.அலுவலகத்தில் காலை 9 மணிக்கு இந்த சத்திய பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பி னர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்வார்.

மேலும் இந்நிகழ்வில் வடகிழக்கு மாகாணங்களில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட் டு வெற்றியடைந்த 98 உறுப்பினர்கள் சத்திய பிராமாணத்தை ஏற்கவுள்ளார்கள். 

இந் நிகழ்வில் கட்சியின் மாவட்டங்களினது நிர்வாக செயலாளர்கள், உதவி நிர்வாக செயலாளர் கள், மற்றும் பிரதேசங்களினது நிர்வாக செயலாளர்கள், உதவி நிர்வாக செயலாளர்களுடன் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு