ரி-20 போல் இறுதி ஓவரில் விறுவிறுப்பான டெஸ்ட் போட்டி!! -ரிசப் பண்டின் அதிரடி ஆட்டத்தால் இந்திய வரலாற்று வெற்றி-

ஆசிரியர் - Editor II
ரி-20 போல் இறுதி ஓவரில் விறுவிறுப்பான டெஸ்ட் போட்டி!! -ரிசப் பண்டின் அதிரடி ஆட்டத்தால் இந்திய வரலாற்று வெற்றி-

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

அவுஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. நாணயசுழல்ச்சியில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலியா 369 ஓட்டங்களை பெற்றது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ஓட்டங்களை பெற்றது. 

33 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இதனால் இந்திய அணிக்கு 328 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரோகித் சர்மா, சப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்தியா 1.5 ஓவரில் 4 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது நேற்றைய 4 ஆவது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஆட்டம் அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இன்று செவ்வாய்க்கிழமை கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் எண்ணிக்கை 18 ஓட்டங்கள் இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ஓட்டங்களை எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒரு பக்கம் புஜாரா நிலைத்து நிற்க மறுபக்கம் சப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஓட்டங்கள் விளாசினார்.

அவர் 90 பந்தில் அரைசதம் அடித்தார். இவரது அரைசதத்தாலும், புஜாராவின் நிதான ஆட்டத்தாலும் இந்தியா மதிய உணவு இடைவேளை வரை ஒரு  விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அப்போது 62 ஓவர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 245 ஓட்டங்கள்  தேவையிருந்தது. உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் சப்மான் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவும் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். 91 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 132 ஓட்டங்கள் எடுத்திருந்ததது.

அடுத்து வந்த ரஹானே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாட முடிவு செய்தார். ஆனால் 22 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 

4 ஆவது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிசப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்தியா தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்துள்ளது. புஜாரா 24 ஓட்டங்களுடனும், ரசஷப் பண்ட் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

அப்போது இந்தியாவின் வெற்றிக்கு குறைந்தது 37 ஓவரில் 145 ஓட்டங்கள் தேவை. கைவசம் 7 விக்கெட் இருந்தது. தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது.

ரசஷப் பண்ட், புஜாரா அபாரமாக விளையாடினர். அரைசதம் அடித்த புஜாரா 211 பந்தில் 56 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் ரிசப் பண்ட் 100 பந்தில் அரைசதம் அடித்தார்.

புஜாரா ஆட்டமிழந்த பிறகு மயங்க் அகர்வால் களம் இறங்கினார். ஒருபக்கம் அடித்தும் விளையாட வேண்டும். அதேசமயம் விக்கெட்டும் இழக்கக் கூடாது என்ற நிலை ரிசப் பண்ட்க்கு ஏற்பட்டது.

மயங்க் அகர்வால் 9 ஓட்டங்களில் வெளியேற ரிசப் பண்ட்-க்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 8 ஓவரில் 50 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கம்மின்ஸ் பந்தில் வாஷிங்டன் சுந்தர் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.

இதனால் கடைசி 7 ஓவரில் 39 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 7 ஆவது ஓவரில் 15 ஓட்டங்கள் கிடைத்தது. இதனால் 6 ஓவரில் 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

6 ஆவது ஓவரில் 9 ஓட்டங்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5 ஆவது ஓவரை நாதன் லயன் வீசினார். இந்த ஓவரின் 5 ஆவது பந்தில் வாசிங்டன் சுந்தர் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி ஆட்டமிழந்தார். என்றாலும் அவர் 29 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து சர்துல் தாகூர் களம் இறங்கினார். இந்த ஓவரில் ஐந்து ஓட்டங்கள் கிடைத்தது. 

இறுதி 4 ஆவது ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 4 ஆவது ஓவரை ஹசில்வுட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பண்ட் பவுண்டரிக்கு விரட்டினார். 4 ஆவது பந்தில் சர்துல் தாகூர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ரிசப் பண்ட் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு