யாழ். மாநகரசபையின் முதல் அமர்வு 26ஆம் திகதி!

ஆசிரியர் - Admin
யாழ். மாநகரசபையின் முதல் அமர்வு 26ஆம் திகதி!

வடக்கில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மையில்லாததால், உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் சபைகளின் முதல் அமர்வு நடைபெற வேண்டியுள்ளது. 

இதனால், சபைகளின் முதலாவது அமர்வுகள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய யாழ். மாநகரசபையின் முதல் அமர்வு வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ்ப்­பாண மாவட்டத்­தி­லுள்ள சபை­க­ளில், உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் முத­லா­வது அமர்வு நடத்­த ­வேண்­டிய நிலை­யில் 16 சபைகள் உள்­ளன. இவற்­றின் முத­லா­வது அமர்வு ஆரம்­ப­மா­கும் திக­தி­கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் ம.பற்­றிக் டிறஞ்­ச­னால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எந்­த­வொரு கட்­சி­யும் அறு­திப் பெரும்­பான்மை பெறாத, தொங்கு நிலை­யில் உள்ள சபை­க­ளின் முத­லா­வது அமர்­வில் தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்­டும். உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யி­லேயே இந்த நிகழ்வு நடை­பெ­ற­வேண்­டும்.

யாழ்ப்­பா­ணம்

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முத­லா­வது அமர்வு எதிர்­வ­ரும் 26ஆம் திகதி மு.ப. 9மணிக்கு மாந­கர சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. சாவ­கச்­சேரி நகர சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2 மணிக்கு நகர சபை மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

பரு­தித்­துறை நகர சபை­யின் முத­லா­வது அமர்வு எதிர்­வ­ரும் 27ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2 மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

காரை­ந­கர் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு எதிர்­வ­ரும் 28ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வலி­கா­மம் மேற்கு பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2 மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

வேலணை பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு எதிர்­வ­ரும் 29ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வலி­கா­மம் தெற்கு பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு பி.ப. 2மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

வலி­கா­மம் வடக்கு பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 2ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை­யின் மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வலி­கா­மம் தென்­மேற்கு பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு பி.ப. 2மணிக்கு சபை­யின் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

வட­ம­ராட்சி தெற்­கு­மேற்கு பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 3ஆம் திகதி மு.ப. 9 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. பருத்­தித்­துறை பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

நல்­லூர் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 4ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. வலி­கா­மம் கிழக்­குப் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் அமர்வு அடுத்த மாதம் 5ஆம் திகதி மு.ப. 9மணிக்கு சபை மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

கிளி­நொச்சி

இதற்கு அமை­வாக, கிளி­நொச்சி மாவட்டத்­தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 5ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு பச்­சி­லைப் பிர­தேச சபை­யின் சபா­மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. கரைச்சி பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 9ஆம் திகதி மு.ப. 9 மணிக்கு சபை­யின் சபா மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

முல்­லைத்­தீவு

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில், கரைத்­து­றைப்­பற்று பிரதே சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 9 ஆம் திகதி பி.ப. 2 மணிக்கு சபை­யின் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. மாந்தை கிழக்கு பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 18ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. துணுக்­காய் பிர­தேச சபை­யின் அமர்வு அடத்த மாதம் 18ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

வவு­னியா

வவு­னியா மாவட்­டத்­தில், வவு­னியா நகர சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 16ஆம் திகதி பி.ப. 10 மணிக்கு சபை­யின் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வெங்­க­லச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யின் அமர்­வும் அன்­றைய தினம் பி.ப. 2.30 மணிக்கு சபை சபா மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வவு­னியா வடக்கு பிர­தேச சபை­யின் அமர்வு அடுத்த மாதம் 17ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை­யின் சபா மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வவு­னியா தெற்கு தமிழ்ப் பிர­தேச சபை­யின் அமர்வு அடுத்த மாதம் 17ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மன்­னார்

மன்­னார் மாவட்­டத்­தில், மன்­னார் நகர சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 10ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. மன்­னார் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2.30மணிக்கு சபா மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நானாட்­டான் பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 11ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. முசலி பிர­தேச சபை­யின் முத­லா­வது அமர்வு அன்­றைய தினம் பி.ப. 2.30 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. மாந்தை மேற்கு பிரதே சபை­யின் முத­லா­வது அமர்வு அடுத்த மாதம் 12ஆம் திகதி மு.ப. 10 மணிக்கு சபை மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

அதேவேளை, உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் முத­லா­வது சபை அமர்வு ஆரம்­பிக்­கப்­ப­டாத சபை­கள் எதிர்­வ­ரும் 20 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன. யாழ்ப்­பா­ணத்­தில் ஊர்­கா­வற் றுறைப் பிர­தேச சபை, கிளி­நொச்­சி­யில் பூந­கரி பிர­தேச சபை, முல்­லைத்­தீ­வில் புதுக்­கு­டி­யி­ருப்பு பிரதே சபை, வவு­னி­யா­வில் வவு­னியா தெற்கு சிங்­க­ளப் பிர­தேச சபை என்­ப­னவே 20ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

பூந­கரி, புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், ஊர்­கா­வற்­து­றைப் பிரதேச சபை­யில் ஈ.பி.டி.பியும், வவு­னியா தெற்கு சிங்­க­ளப் பிரதே சபை­யில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யும் ஆட்சி அமைக்­க­வுள்­ளன.மேற்­படி அர­சி­யல் கட்­சி­கள் குறித்த சபை­க­ளின் மொத்த ஆச­னங்­க­ளில் 50 வீதம் அல்­லது அதற்கு மேல­தி­க­மா­கப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.இந்­தச் சபை­க­ளின் முத­லா­வது அமர்வு, மேற்­படி கட்­சி­க­ளின் செய­லர்­க­ளால் பெயர் குறிக்­கப்­பட்ட தவி­சா­ளர் தலை­மை­யில் இடம்­பெ­றும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு