பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலைய ஊழியர்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில், வர்த்தக நிலையம் முடக்கம்..
யாழ்.நகரில் உள்ள அங்காடியில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலைய ஊழியர்கள் 3 பேர் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டதுடன், வர்த்தக நிலையம் முடக்கப்பட்டுள்ளது.
நகரில் உள்ள அங்காடியில் எழுமாற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு மறுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றிருந்த சுகாதார பிரிவினர் வர்த்தக நிலையத்தை முடக்கியதுடன் அங்கு பணியாற்றிய 3 பேர் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.