யாழ்.உடுவில் பகுதியில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவில் - அம்பலவாணர் வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று இரவு 9.30 மசியளவில் புகுந்த ரவுடி கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

வயோதிபப் பெண் ஒருவரும் அவருடைய மகனும் வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், முகங்களை மறைத்தவாறு வீட்டுக்குள் புகுந்துள்ளது.

அங்கிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் உட்பட வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கிச் சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

கொழும்பில் இருந்து வந்து வாடகை வீட்டில் தங்கியிருக்கும் தாயும், மகனும் நீண்டகாலமாக வசிக்கின்றனர் என்றும், அவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் செல்வதில்லை என்றும் அயலவர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு