யாழ்.கல்லுண்டாயில் வீசிய திடீர் சுழல் காற்று..! 8 வீடுகள் சேதம், 12 குடும்பங்கள் அந்தரிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாயில் வீசிய திடீர் சுழல் காற்று..! 8 வீடுகள் சேதம், 12 குடும்பங்கள் அந்தரிப்பு..

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை திடீரென வீசிய சுழல் காற்றினால் 9 வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் 12 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் இன்று ஒரு மணியளவில் வீசிய திடீர் காற்றின்போது இந்த அணர்த்தம் ஏற்பட்டது.

இப் பகுதியில் மாரி மழை பொழிந்த நேரம் திடீரென காற்றின் காரணமாக வீட்டின் ஓடுகள், கூரைத் தகடுகள் தூக்கி வீசப்பட்டதனால் வீட்டில் இருந்தோர் பாதுகாப்பு தேடித் தப்பித்தனர். 

இருந்தபோதும் மழை நீர் வீட்டிற்குள் புகுந்தமையால் வீட்டிற்குள் இருந்த உடமைகள் பலவும் நீரில் நனைந்து சேதமடைந்தன.இவ்வாறு ஏற்பட்ட அணர்த்தம் காரணமாக 

பாதித்த பகுதிகளை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் அணர்த்த முகாமைத்துவ பிரிவினர் அப் பகுதிக்கு விரைந்து நேரில் பார்வையிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு