யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையர்களை மடக்கிய அதிரடிப்படை..! கொள்ளையர்கள் தப்பி ஓட்டம், தேடுதல் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளையர்களை மடக்கிய அதிரடிப்படை..! கொள்ளையர்கள் தப்பி ஓட்டம், தேடுதல் தொடர்கிறது..

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலை இன்று இரவு அதிரடிப்படையினர் முற்றுகையிட்ட நிலையில் கொள்ளை கும்பல் தப்பி ஓடியுள்ளபோதும் வாகனம் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

மணற் கடத்தல் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிரடி படையினர் மணற் கொள்ளையில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தைக் விரட்டிச் சென்றுள்ளனர். சுமார் ஐந்து கிலோ மீற்றருக்கும் மேற்றபட்ட தூரத்திக்குக் விரட்டி சென்ற போதும், 

கொள்ளையர்கள் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாகனமும், கடத்தப்பட்ட மணலும் அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டு, பருத்தித்துறைப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு