கருணா அம்மானை சந்திக்க கத்தியுடன் சென்றவர் கைது..! கிளிநொச்சி - முரசுமோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I

முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா) கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்தியவேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்கு பசைளை இடுவதற்காக எடுத்து சென்றதாகவும், 

திரும்புகையில் கருண அம்மானை சந்தித்து செல்ல சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு