கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதி கோர விபத்து..! இருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I

கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் வீதியில் கலியோட பாலம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இடையே கார் உடன் மோட்டர்சைக்கிள் 

மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டர்சைக்கில் வந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான கார் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருடையது எனவும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மதுபோதையில் 

இருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு