யாழ்.நகரில் உள்ள ஆரியகுளத்திலிருந்து சடலம் மீட்பு..! 2 நாட்களாக காணாமல்போயிருந்த முதியவர் என தகவல்..
யாழ்.நகரில் உள்ள ஆரியகுளத்திற்குள் முதியவர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.
அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரின் சடலமே இவவாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த முதியவர் 2 நாட்களாக காணாமல்போயிருந்த நிலையில் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.