இராணுவத்திடம் உள்ள முன்பள்ளிகளை வடமாகாணசபையிடம் தாருங்கள்

ஆசிரியர் - Editor I
இராணுவத்திடம் உள்ள முன்பள்ளிகளை வடமாகாணசபையிடம் தாருங்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திi ணக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாணசபையிடம் ஒப்படைக்கவேண்டும். என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோரிக்கை விடுப்பார்கள். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவாஞனம் கூறியுள்ளார். வடமாகாணசi பயின் 118வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போ தே அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது

மேலும் அவர் கூறுகையில், நேற்று யாழ்.தேர்தல் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு கூடியிருந்தது. இதன்போது இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் முன்பள்ளிகளை வடமாகாணசபையிடம் ஒப்படைப்பது தொடர்பில் 

தெளிவாக ஆராயப்பட்டது. அதில் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகள் அனைத்தையும் வடமாகாண சபையிடம் ஒப்ப டைக்கவேண்டும் என நாடாளுமன்றில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதென தீர்மானிக்கப்பட்டிரு க்கின்றது. அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்n

னடுப்பார்கள். என அவை தலைவர் மேலும் கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இராணுவ ஒழுக்கங்கள் போதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு சீருடைகளும் இராணுவ சீருடைகளை ஒத்த

தாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் N மற்படி முன்பள்ளிகளை வடமாகாணசபை பொறுப்பேற்றால் அவர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊ தியம் 30 ஆயிரம் ரூபாய் வரை காணப்ப டுவதல் மற்றய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அதே அளவு ஊதி யத்தை வழங்கவேண்டி

ய நிலை வரும், இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் வரும் என கூறினார். இதற்கு மீண்டும் பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளை மட் டுமல்லாமல் அந்த முன்பள்ளிகளுக்காக பாதுகாப்பு ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியையும் வடமாகாண

சபையிடம் ஒப்படைக்கவேண்டும். என்றே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தை சரி செய்யலாம் என கூறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு