வவுனிக்குளம் கோர விபத்தில் காணாமல்போயிருந்த 3 பேரும் உயிரிழப்பு..! இன்று அதிகாலை இருவர் சடலம் மீட்பு..

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - வவுனிக்குளம் விபத்தில் காணாமல் போயிருந்த இருவரும் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனிக்குளம் அணைக்கட்டு வழியாக பட்டா வாகனத்தில் 4 பேர் பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் சிறுவன் ஒருவன் நீந்தி கரை ஏறியிருந்தான் எனினும் 3 பேர் காணாமல்போன நிலையில் பொதுமக்கள் இணைந்து நடத்திய தேடுதலில்

ஒருவர் மீட்கப்பட்டார். எனினும் மற்றய இருவரையும் தொடர்ந்தும் தேடிவந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் குளத்திலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு