உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! 18 வயதான மகன் பலி, தந்தை படுகாயம்..

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு - மீராவோடை பகுதியில் உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திரம் ஒன்று மீராவோடை பகுதியில் இருந்து கறுவாக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பட்டா வாகனத்திற்கு இடம்கொடுத்த சந்தர்ப்பத்தில் 

உழவு இயந்திரத்திற்கு பின்னால் வந்த மோட்டர் சைக்கிள் உழவு இயந்திரத்தை முந்திச் செல்வதற்கு முயற்சித்த போதே உழவு இயந்திரத்தில் மோதுண்டதிலயே இந்த விபத்து இடம்பெற்றது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வாழைச்சேனை விநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் கிரிஜன் (வயது-18) என்பவர் ஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளதுடன், அவரது தந்தையான சிவப்பிரகாசன் ஜெயசீலன் என்பவர் 

காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பபு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு