நாடிக்கு மாஸ்க் (முககவசம்) போட்டுக்கொண்டு அலைந்து திரிந்தவர் கைது..! சாவகச்சோி சந்தையில் இன்று காலை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் எழுந்திருக்கும் நிலையில் யாழ்.சாவகச்சோியில் நாடிக்கு மாஸ்க் (முககவசம்) அணிந்திருந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மருதனார்மடம் சந்தையை அடிப்படையாக கொண்டு யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

பல சந்தைகள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சோி சந்தையில் இன்று காலை  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என பொலிஸாரும், இராணுவத்தினரும் ஆராய்ந்துவந்தனர். 

இதன்போது நாடிக்கு மாஸ்க் (முககவசம்) அணிந்துகொண்டு சந்தையில் பொறுப்பற்று அலைந்து திரிந்தவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு