வெடிமருந்தை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்த அறிவாளி..! திடீரென தீ பற்றிக்கொண்டத்தில் பலர் காயம், வீடும் தீ பிடித்தது..!

ஆசிரியர் - Editor I

வெடிமருந்தை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்த நிலையில் வெடிபொருள் தீ பிடித்து எரிந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் காயமடைந்ததுடன், வீடும் தீ பிடித்து எரிந்துள்ளது. 

குறித்த சம்பவம் யாழ்.குருநகர் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. மீன்பிடிப்பதற்கு டைனமைட் தயாரிப்பதற்காக சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட வெடிமருந்தை அரைக்கும் இயந்திரத்தில் அரைத்த நிலையில்

குறித்த வெடிபொருள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் வீடு தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் அயலவர்கள் கூடி தீயை அடைத்தபோதும் வீட்டிலிருந்த சிறுவர்கள் உட்பட 8 பேர் எரிகாயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர். 

காயங்களுக்குள்ளானோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு