மயக்கமடைந்த சிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்..! பொலிஸ் விசாரணையில் குழந்தையை பெற்று புதைத்துவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம், கிளிநொச்சியில் சம்பவம்.

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவர் தனது 5 மாத குழந்தையை மண்ணுக்குள் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சில மணி நேரங்களுக்கு முன்னர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றார். 

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய உடலில் குழந்தை பிறந்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கின்றனர்.

அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது வயிற்றில் இருந்த 5 மாத சிசு இருந்ததாகவும், அதை பெற்று புதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் புதைக்கப்பட்ட இடம் பிரமனந்தனாறு என்றும், உழவனூர் என்றும் மாறி மாறி தகவல்களை வழங்கிவருவதால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தினை கண்டுபிடிப்பதில் 

நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு