மருதனார்மடம் பிரதேசத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடுங்கள் மாகாண சுகாதார பிரிவு கல்வியமைச்சுக்கு அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் சந்தையை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக்கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை மருதனார்மடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிசிஆர் முடிவுகளின் விபரங்கள் இன்று மாலையே வெளியிடப்பட்டும். யாழ்ப்பாணத்தின் ஏனைய பொதுச் சந்தைகளிலும் உள்ளவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு