யாழ்.மருதனார்மடம் சந்தை வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தீவிரம்..! ஒரு பகுதியினருக்கு இன்று பீ.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மருதனார்மடம் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தொற்றுக்குள்ளானவருடன் சந்தையில் வர்த்தகம் செய்யும் ஒரு பகுதியினருக்கு இன்று காலை பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. 

நேற்றய தினம் மருதனார்மடம் சந்தையில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்தவர்களை

அடையாளம் காணும் நடவடிக்கைகள் சுகாதார பிரிவினால் துரிதப்படுத்தப்பட்டிருப்பதுடன் சந்தை வர்த்தகர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை சுகாதார பிரிவினர் ஆரம்பித்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு