கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவரே பருத்துறை கடலில் கைது..! இந்தியாவுக்கு தப்பி செல்ல முயற்சி..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை கடற்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி எனவும் அவர் யாழ்.பருத்துறையை சேர்ந்த படகு ஓட்டியின் உதவியுடன் தமிழகம் செல்ல முயன்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

அண்மைக்காலமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் அதிகளவும் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையில் 

பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு இலங்கை யாழ் மாவட்டம் பருத்தித்துறை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக ஒருவர், தமிழகத்திற்கு தப்பி செல்ல உள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, 

அந்த பகுதியில் கடற்படையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு படகை நோக்கி இலங்கை கடற்படையினர் சென்றபோது, படகு அருகே நின்று இருவர் தப்பி செல்ல முயன்றனர். 

அவர்களை மடக்கிப் பிடித்த கடற்படையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கை திருகோணமலையில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்படும், குற்றவாளி என்பது தெரியவந்தது. இதனையடுத்தது, 

குறித்த குற்றவாளியையும், அவருக்கு உதவியவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சட்டவிரோதமாக தப்பிக்க பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 

விசாரணைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு