பொதுச்சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு..! இருவருக்கு பருத்துறை நீதிவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு..

ஆசிரியர் - Editor I

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு குடிதண்ணீர் விநியோக அனுமதியை காண்பிக்க மறுத்து அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவரை எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க பருத்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டிருக்கின்றார். 

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்ட இருவரை வழிமறித்த நெல்லியடி பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். 

அதன்போது அவர்கள் இருவரும் பொதுச் சுகாதார பரிசோதருடன் முரண்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாடு தொடர்பில் குடிதண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்ட இருவரையும் நேற்று விசாரணைக்கு அழைத்த பொலிஸார், 

அவர்களைக் கைது செய்துள்ளனர். பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.சந்தேக நபர்களில் ஒருவர் தகாத வார்த்தைகளால் ஏசியதாகவும் மற்றைய சந்தேக நபர் தன்னை தாக்க வந்ததாகவும் 

பொது சுகாதாரப் பரிசோதகர் மன்றுரைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு