உறவினர்களுக்கிடையிலான தகராறை தீர்க்க சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கொலை செய்யப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

நேற்றிரவு பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப்பிரச்சினை தொடர்பாக, ஏற்பட்ட முறுகல் நிலையினை 

சமாதானம் செய்ய சென்றவேளை குறித்த நபரின் உறவினர் ஒருவரினால் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு