வீதியில் தேங்கி கிடந்த வெள்ளத்தில் விழுந்து குடும்பஸ்த்தர் பலி..! யாழ்.துன்னாலையில் சம்பவம்..
யாழ்.துன்னாலையில் வெள்ளத்தில் விழுந்து குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது.
கிருஷ்ணபிள்ளை சிவகுமார் (வயது 34) என்பவரே வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கின்றார்.
இந்நிலையில் வீட்டிலிருந்து சென்றவரை காணாத நிலையில் உறவினர்கள் தேடியபோது வெள்ளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் பருத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.