யாழ்.பருத்துறை கடலில் கடற்படை அதிரடி..! கடத்தலுக்கு சென்ற இருவர் கைது, இந்திய, இலங்கை பணம் மற்றும் பல பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறையிலிருந்து கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த இருவர் பருத்துறை கடற்பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பருத்துறையை சேர்ந்தவர் எனவும் மற்றயவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட படகோட்டி ஏற்கனவே கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,

இந்திய மற்றும் இலங்கை பணம் மற்றும் கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் பருத்தித்துறை பொலிஸாரிடம்

ஒப்படைத்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு