யாழ்.சாவகச்சோி - நுணாவில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் விபரம் குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - நுணாவில் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் விபரம் குறித்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தகவல்..

யாழ்.சாவகச்சோி - நுணாவில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். 

இதன்படி திருமதி ஆன் டேரோளினி (வயது30) மற்றும் யோகதாஸ் மகிழன் (வயது6) ஆகிய இருவர் சம்பவத்தில் உயிரிழந்திருக்கின்றனர். 

மேலும் ஆன் மக்கிலியோட் (வயது 6), லேபோனியா, கரோலின் (வயது 35) ஆகிய 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவேளை விபத்தில் சிக்கியவர்கள் யாழ்.நகரை சேர்ந்தவர்கள் என தொியவருகின்றது. மேலும் வீதியால் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியை முந்தி செல்ல முயன்றபோது

கார் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் காரை ஓட்டி சென்ற சாரதி கூறியுள்ளார். 

மேலும் விபத்துக்குள்ளானபோது காரின் பின்புற சக்கரங்களில் ஒன்றின் காற்றுபோனதாகவும் சாவகச்சோி - சரசாலையில் உள்ள மனைவியின் சகோதரனின் 

திருமண ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக சென்று கொண்டிருந்தபோதே விபத்து இடம்பெற்றதாகவும் சாரதி தனது வாக்மூலத்தில் தொிவித்திருக்கின்றார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு