யாழ்.சாவகச்சேரி - நுணாவிலில் கோர விபத்து..! இருவர் உயிரிழப்பு, மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில், இருவர் காயம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.சாவகச்சோி - நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து நுணாவில் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றின் முன்னால் திருத்த பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் வீதியால் சென்ற சிலர் மிகுந்த சிரமத்தின் மத்தியில் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், 

பெண் ஒருவரும், 4 வயதான சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

மேலதிக தகவல் இணைக்கப்படும்...



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு