யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாநகரசபை உறுப்பினர் உதவி..

ஆசிரியர் - Editor I

“புரவி” புயல் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்.மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயாளன் உலர் உணவு பொதிகள் மற்றும் உணவு உதவிகளை வழங்கியுள்ளார். 

மதர் கெயர் வைத்தியசாலையின் உதவியுடன் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் ஒருவருடைய உதவியுடன் சுமார் 300ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாலை உணவையும் 

மாநகரசபை உறுப்பினர் வழங்கினார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு