மக்கள் நடமாட்டம் அதிகமான யாழ்.நகரில் பண பையை பறித்துக் கொண்டு ஓடிய திருடன்..! பிடித்து நைப்புடைத்த இளைஞர்கள், தடுத்து பணமும் சாப்பாடும் வாங்கி கொடுத்த மூதாட்டி.

ஆசிரியர் - Editor I

யாழ்.நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த வயதான பெண் மணியின் பண பையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்த நிலையில், திருடனுக்கு பணம் கொடுத்து குறித்த வயோதிப பெண்மணி அனுப்பிவைத்திருக்கின்றார். 

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றிருக்கின்றது. யாழ். நகரில் காங்கேசன்துறை வீதியில் நடந்து சென்ற வயோதிப பெண்ணின் பணப் பையை பறித்த இளைஞர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இதன்போது மூதாட்டி எழுப்பிய குரலை அடுத்து வீதியால் பயணித்த இளகஞர்கள் குறித்த திருடனை மடக்கிப் பிடித்து 

மூதாட்டியின் பணப்பையை மீட்டெடுத்தனர். இதன்போது மூதாட்டி பறிகொடுத்த 20 ஆயிரம் ரூபா பணமும் பத்திரமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து அங்கே கூடி நின்றவர்களால் திருடனை நையப்புடைத்தபோது பணப்பையை பறிகொடுத்த மூதாட்டி அதனை தடுத்து நிறுத்தி 

திருடனிற்கு உணவும் வாங்கி கொடுத்து ஆயரம் ரூபா பணமும் வழங்கி அனுப்பி வைத்தார். இதன்போது அங்கே கூடியவர்கள் திருடனை பொலிசாரிடம் ஒப்படைக்க முனைந்தபோதும் மூதாட்டி அதற்கும் இணங்கவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு