நம்பிக்கை இல்லாவிட்டால் பாணத்தை குடிக்காதீர்கள்..! காளி அம்மன் கனவில் அருளிய பாணம், அவமானப்படுத்த வேண்டாம், தம்மிகா பண்டார தொிவித்துள்ள கருத்து..

ஆசிரியர் - Editor I

கொரோனா குணப்படுத்தும் பாணத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அதனை குடிக்கவேண்டாம். என தம்மிகா பண்டார கூறியிருக்கின்றார். 

இன்று 5000 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறிய நிலையில் அவர் தனது வீட்டின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கின்றனர். 

இந்நிலையில் கூடியுள்ள மக்களுக்கு முன் உரையாற்றுகையில் ஆயுர்வேத கொவிட் மருந்து பாணம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. 

பிடிக்கவில்லை என்றால் குடிக்கவேண்டாம். அவமதிக்கவேண்டாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினார்.

பாதிக்கப்பட்ட ஒருவர் இதைக் குடித்தால், கொரோனா வைரஸ் உடலில் இருந்து அற்றுப்போகும் என்றும், ஆரோக்கியமான ஒருவர் இதைக் குடித்தால், 

வைரஸ் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வார் என்றும் அவர் கூறினார். அவரது வீட்டின் முன்னும், சாலையின் இருபுறமும் 10,000 க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர், 

மேலும் அவர்களைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு