வீடு புகுந்து திருட முயற்சித்த திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்..! இன்று அதிகாலை யாழ்.கல்வியங்காட்டில் சம்பவம்..
யாழ்.கல்வியங்காடு பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்த திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படகத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதியசெம்மணி வீதியிலுள்ள சிவஞானம் கருணாநிதி என்பவரின் வீட்டில் இன்று (08-12-2020) செவ்வாய்க்கிழமை அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப்பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார் சந்தேக நபரை பொலிஸ்நிலையம் அழைத்துச்சென்றதோடு மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வீட்டின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.