SuperTopAds

விக்கெட் வேட்டையை தொடங்கிய நடராஜன்!! -இந்தியாவிற்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்-

ஆசிரியர் - Editor II

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடராஜன் தனது முதலாவது விக்கெட்டாக அவுஸ்திரோலியா ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஸ்சேன் விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்தியா – அவுஸ்திரேலியா மோதிய 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அவுஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று புதன்கிழமை நடந்தது. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  5 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களை பெற்றது. விராட் கோலி 63 ஓட்டங்களையும், ஜடேஜா 66 ஓட்டங்களையும் எடுத்தனர். 

அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ஓட்டங்களை குவித்தார். இதையடுத்து 303 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின்  தொடக்க ஆட்டக்கார‌ர் மார்னஸ் லபுஸ்சேன் ஆட்டம் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை  நடராஜன் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் நடராஜன்.