வடக்கு - கிழக்கு மாகாணங்களில் போிடர் மீட்பு பணியில் களமிறங்குங்கள்..! முப்படை தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்பு..

ஆசிரியர் - Editor I

“புரவி” புயலினால் ஏற்படப்போகும் போிடரிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபடுமாறு வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டுள்ள முப்படை தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை வழங்கியிருக்கின்றது. 

“புரவி” அபாய நிலை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் இந்த பணிப்புரையை வழங்கியிருக்கின்றார். இதன்படி முப்படைகளும் பொலிஸாரும் பேரிடர் உதவிப் பொறிமுறைக்கு அரச துறைகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்கவேண்டும்.

என்று பாதுகாப்பு செயலாளர், ஒய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு