கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உயிர் பிரிந்தது!! -இன்றும் பேசப்படும் அவர் புகழ்-

ஆசிரியர் - Editor II
கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் உயிர் பிரிந்தது!! -இன்றும் பேசப்படும் அவர் புகழ்-

உலகின் மிகச்சிறந்த கால்ப்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த டியாகோ மரடோனா தனது 60 வயதில் தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீ்ட்டில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கடந்த நவம்பர் மாதம் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அதிகளவுக்கு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்பட இருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினா உலகக் கோப்பை கால்ப்பந்தாட்டப் கிண்ணத்தை வெற்றி பெற்ற போது மரடோனா அந்த அணியின் தலைவராக இருந்த நிலையில் ஆர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் நுழைவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் காரணமாக இருந்தது. புகழ்பெற்ற அந்தக் கோல் பலராலும் இன்றும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு