இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜனை வாழ்த்திய நயன்தாரா!!

ஆசிரியர் - Editor III
இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் நடராஜனை வாழ்த்திய நயன்தாரா!!

ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு, நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக நட்சத்திர வீரர்களை தனது துள்ளியமான யார்க்கர் மூலம் திணறடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பலனாக அடுத்ததாக நடக்க இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நடராஜன், ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் படத்தை காண தானும் தனது குடும்பத்தினரும் ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை நயன்தாரா,  “தாங்களும், தங்களது குடும்பத்தினரும் மூக்குத்தி அம்மன் படத்தை காண ஆவலோடு இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்ததற்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு