காலநிலை சீரின்மையால் யாழ்.வடமராட்சியில் கரை ஒதுங்கிய இந்திய மீனவர்கள்..! பாதுகாப்பாக மீட்டு திருப்பி அனுப்ப கடற்படை துரித நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

காலநிலை சீரின்மையினால் இயந்திர கோளாறு காரணமாக 14 இந்திய மீனவர்கள் யாழ்.மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு கடலில் கரை ஒதுங்கியுள்ளனர். 

வடமராட்சி கிழக்கு பகுதியில் கரை ஒதுங்கிய குறித்த இந்திய மீனவர்கள் கடற்படையினால் மீட்கப்பட்டு யாழ்.காங்கேசன்துறை கடற்படைதளத்தில் படகுகள் சீர் செய்யப்பட்டு 

மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபுவதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் துரிதகதியில் மேற்கொண்டிருக்கின்றார்கள். 

மேலும் கடற்படையினர் இந்திய மீனவர்களை கைது செய்ததாக கூறப்பட்டபோதும் கடற்படையினர் எவரையும் கைது செய்யவில்லை என்பதுடன், பாதுகாப்பாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு