13 வயது மற்றும் 16 வயதான பிள்ளைகளுக்கும் தாய், தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி..! எதேச்சையான பீ.சி.ஆர் பரிசோதனையில் உறுதியானது..

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு நகரில் தந்தை, தாய், பிள்ளைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில் இன்று காலை உள்ள ஒருவருக்கு கோரோனா தொற்று இனங்காணப்பட்டது .இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் நிலையில் 

எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் இவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த அடிப்படையில் இன்று காலை அவரை சுகாதார பிரிவினர் இன்று சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற அதேவேளை குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

இதன்போது குறித்த நபரின் மனைவி மற்றும் 16வயதுடைய மகள்,13வயதுடைய மகன் ஆகியோ ருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்னொரு மகனான 20வயதுடைய மகனுக்கு 

தொற்று ஏற்படவில்லையெனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த குடும்பத்துடன் தொடர்புகளை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் 

சுகாதார பிரிவினரிரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு