கொரோனா தொற்றினால் இன்றுமட்டும் 5 பேர் மரணம்..! 3 வாரத்தில் 16 பேர் மரணம், 29 ஆக உயர்ந்தது எண்ணிக்கை, அச்சுறுத்தும் கொரோனா..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தள்ளது. மினுவாங்கொட, பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து 

கடந்த 3 வாரத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளார். நாட்டில் கடந்த ஜனவரி முதல் 12 ஆயிரத்து 187 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் 6 ஆயிரத்து 623 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு