ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றொருவர் படுகாயம்..

மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளான். 

குறித்த விபத்து மட்டக்களப்பு - கல்குடா கும்புறுமூலையில் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில், கிரான் பிரதேசத்தை சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் (வயது-21) என்ற இளைஞன்

விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் கருவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா (வயது-48) என்பவரே காயமடைந்துள்ளார்.

கும்புறுமூலை பாசிக்குடா வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு