அடாவடி புரிந்த சுமணரத்ன தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் கட்டளை..!

ஆசிரியர் - Editor I
அடாவடி புரிந்த சுமணரத்ன தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் கட்டளை..!

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பேபிட்டிய சுமணரத்தின தேரரை நீதிமன்றில் அல்லது பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்து அல்லது பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்குமூலம் அளிக்கும்படி அறிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், அதுபற்றி விசாரணை நடத்தும்படியும் சுமனரத்தன தேரர் குரல் எழுப்பியிருந்தார். இந்நிலையில் அந்தப் பிரதேசத்தில் சிலர் நிர்மாணப் பணிகள் அல்லது வேறு பணிகளுக்காக நில அளவையில் ஈடுபட்டபோது அந்தப் பகுதிக்கு விரைந்த தேரர், 

அங்கிருந்த அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுமனரத்தன தேரர், இறுதியில் அங்கிருந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவர்மீது தாக்குதலையும் நடத்தியதாக காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு