இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி..! 3 பேர் படுகாயம், இருவர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I

கட்டுப்பாடற்ற வேகத்தினால் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ளனர், காயமடைந்தவ்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை அண்டி வசிக்கும் நாகராசா சதீஸ் (வயது 22) என்பவரே பலியாகியுள்ளார்.மேலும், 

மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ். சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) கருணாகரன் தனுசன் (வயது 26) ஆகியோர் காயமடைந்த நிலையில் 

உடனடியாக அருகிலுள்ள மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் படுகாயமடைந்த எஸ். சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) ஆகியோர் 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,

நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறப்படுகின்றது.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு