விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர அனுமதிக்கவேண்டும்..! இல்லையேல் வடகிழக்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்..

ஆசிரியர் - Editor I

தமிழ் மக்களின் உரிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவுகூரு வது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்கு தடை விதிப்பது தமிழர்களின் உரிமைகளை மறுதலிப்பதாகும், 

எனவே அரசாங்கம் இந்த தடைகளை அடுத்த சில நாட்களில் அகற்றவேண்டும். அதற்கான கோரிக்கை நாளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கு பதிலளிக்கவேண்டும். பதிலளிக்க தவறினால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து 

தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். துாதுவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு உண்மை உணர்த்தப்படும். மேற்கண்டவாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்த்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார். 

தியாகி திலீப னின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை, மற்றும் சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டமை உள்ளிட்ட அரசின் ஜன நாயக மறுப்பு செயற்பாடுகளை கண்டிப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் அழைப்பில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், 

தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ்தேசிய நிலைப்பாட் டில் இயங்கும் கட்சிகள் இணைந்து இன்று நல்லுார் இளங்கலைஞர் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந் தன. இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையி ல், தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் உயிர் தியாகம் செய்து ள்ளனர். அவர்களை அஞ்சலிப்பதும், நினைவுகூருவதும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உரிமையும், கடமையுமாகும். 

அதற்கு எதிராக தடைபோடுவது தமிழர்களின் உரிமையை மறுதலிப்பதாகவே அமையும். எனவே அரசாங்கத்தின் இத்த கைய நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் நிரகரிக்கிறது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் இவ்வாறான தடை உத்தரவுகளை நீக்கவேண்டும். 

திலீபனுக்கு மட்டுமல்லாமல், போராளிகளையும், பொதுமக்களையும் நினைவுகூருவது எங்கள் கடமையும், உரிமையுமாகும். அதனை பயங்கரவாதம் என கூறி தடைசெய்வது ஏற்புடையதல்ல. இன்றைய கூட்டத்தில் சில தீர்மானங்களை எட்டியிருக்கின்றோம். 

பிரதானமாக தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாகநினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் நீக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் கைவை க்ககூடாது. என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு நாளை கடிதம் எழுதவுள்ளோம். 

அதற்கு எமக்கு பதில் வழங்கப்படவேண்டும். அரசாங்கம் இதனை செய்யுமா? செய்யாதா? என்பதற்கு அப்பால் எமக்கு பொருத்தமான பதில் வழங்கப்படவேண்டும். பதில் வழங்காவிட்டால் அல்லது இந்த விடயத்தில் பொறுப்பான பதில் வழங்கப்படாவிட்டால் தமிழர் தாயகத்தில் அரசின் செயற்பாடுகளை கண்டித்து 

தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அந்த வழிக்குள் எங்களை அரசே தள்ளுகின்றது. அதனை நாங்கள் துாதுவராலயங்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லுவோம் என்றார். இதேவேளை நேற்றய கூட்டத்தில் 

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாமை தொடர்பாக கேட்டபோது அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் கலந்துகொள்ளவில்லை. எனினும் இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் தொடர்ந்தும்பேசுவோம் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு