ஒவ்வொரு நொடியும் பாலியல் பலாத்கார மிரட்டல்!! -கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை-

ஆசிரியர் - Editor III
ஒவ்வொரு நொடியும் பாலியல் பலாத்கார மிரட்டல்!! -கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை-

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி, சமூகவலைத்தளங்களில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதால், உரிய பாதுகாப்பு வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இருபருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்

அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்தன.

இதனால், அவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9 அன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார். இருப்பினும் அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காத காரணத்தினால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு