30 வயதான பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நடந்த கதி..!

ஆசிரியர் - Editor I
30 வயதான பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு நடந்த கதி..!

30 வயதான பெண்னொருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் புரிந்த ஒரு பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டு இம் மாதம் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் இன்று உத்தரவிட்டார். ஸ்ரீமங்கலபுர,சோமபுர சேருநுவர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முப்பது வயதுடைய குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்த போது வீட்டுக்குள் புகுந்து வல்லுறவுக்குட்படுத்தியதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய 

சந்தேக நபரை கைது செய்துததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் இராணுவ படைப்பிரிவில் கடமையாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தலத்தில்) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு