ஓடும் வாகனத்தில் நடந்த அசிங்கம்..! 8 வயது சிறுமி உட்பட, 8 பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I

திருகோணமலை - சீனன்குடா பாலம்போட்டாறு பகுதியில் வாகனம் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சீனன் குடா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வேன்னை சோதனை செய்தபோது சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களும் 

கைது செய்ப்பட்டதாக சீனன் குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.நாள் ஒன்றுக்கு 10000 ரூபாய் வாடகை வேன் ஒன்றில் 25 வயது முதல் 50 வயதுடைய எட்டு பெண்கள் சூதாடிய நிலையில் 

கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 79650 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மூதூர், தக்வா நகர் பிரதேசத்தைச்சேர்ந்த இரு பெண்களும், 

சங்கமம் பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும், சிங்கபுர இரண்டாவது ஒழங்கையைச்சேர்ந்த ஒருவரும், ஆண்டாங்குளத்தைச்சேர்ந்த ஒருவரும், மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும், 

கொட்பே பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும், ஜந்தாம் கட்டை பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவரும், ரேவதி கிராமத்தைச்சேர்ந்த ஒருவரும் அடங்குவதுடன் அதில் ஒரு தாய் தனது எட்டு வயது மகளையும் 

தன்னுடன் வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள சீனன் குடா பொலிஸார் 

கைது செய்யப்பட்டவர்களை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு