சுகாதார பரிசோதகர் என கூறி பொதுமக்களிடம் பணம் பறித்துவந்த போதை அடிமையை அடித்து நொருக்கிய பொதுமக்கள்..! விசாரணையில் அதிர்ந்துபோன பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
சுகாதார பரிசோதகர் என கூறி பொதுமக்களிடம் பணம் பறித்துவந்த போதை அடிமையை அடித்து நொருக்கிய பொதுமக்கள்..! விசாரணையில் அதிர்ந்துபோன பொலிஸார்..

தன்னை ஒரு சுகாதார பரிசோதகர் என அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்துவந்த கள்ளனை பொதுமக்கள் கண்டுபிடித்து நையப்புடைத்ததுடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

மட்டக்களப்பு- செங்கலடி, கரடியனாறு பகுதிகளில் உள்ள தமிழ் கிராமங்களுக்குள் செல்லும் குறித்த நபர் தன்னை சுகாதார பரிசோதகர் என அடையளாப்படுத்தியதுடன், 

வீடுகள், கடைகளுக்குள் புகுந்து சோதனையிடுவதாக பாவனை செய்து நுளம்பு உள்ளதெனவும், சுகாதாரம் இல்லை எனவும் குற்றஞ்சாட்டி அதற்காக வழக்கு தாக்கல் செய்யாமல் விடுவதற்காக பணம் பெற்றுவந்துள்ளார்.

 இந்நிலையில் கொம்மாதுறை ஒருமுலைச்சோலை பகுதியில் தன்னை சுகாதார பரிசோதகர் என கூறி மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்க முயற்சித்துக் கொண்டிருக்த நிலையில், 

இவருடைய செயற்பாடுகளில் சந்தேகமடைந்த “எல்லாளன்” விழிப்புகுழு இளைஞர்கள் விசாரிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு

அடித்து நொருக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியை சேர்ந்த நசீம் என்ற போதை அடிமை என பொதுமக்கள் கூறுகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு