காயத்துடன் மக்கள் குடியிருப்புக்கள் வந்த சருகு புலி..! பாதுகாப்பாக மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
காயத்துடன் மக்கள் குடியிருப்புக்கள் வந்த சருகு புலி..! பாதுகாப்பாக மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த மக்கள்..

காயமடைந்த நிலையில் பொதுமக்களின் குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி மக்களால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

மட்டக்களப்பு - பொியகல்லாறு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது 

அண்மைக்காலமாக விபத்துகளில் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பகுதியில் 

விபத்தில் சிக்கிய சருகு புலியொன்று மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்ததினால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.இவ்விடயம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 

அங்குவந்த அதிகாரிகள் மற்றும் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த சருகு புலி பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சருகுபுலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு பாதுகாப்பான முறையில் காட்டுக்குள் விடுவதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு